பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ழந்தது ஆற்றலை அன்று, வாடியது வாழ்க்கையில்லை. இவைதாம் அமைதி எனப்படுவது. இழந்ததும், தேய்ந்து போனதும் அவற்றின் முழுமையே.

- எ.எ

ன்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்ளும்போது, என்னை அழுத்திடும் பாரம் மென்மையாகிறது.

- மின்

முகில்கள், காடு இவற்றின் இசையோடு கூட, உலகின் நெஞ்சத்தில் எனது பாடல்கள் அவற்றிற்குரிய இடத்தைப் பெறுகின்றன.

-தோ

லகம் உறங்கும் நேரத்தில் நான் உன் வாசலை அடைகிறேன். விண்மீன்கள் பேச்சற்று இருக்கின்றன. பாட நான் அஞ்சுகிறேன்.

- தோ

ன் மூலமாக நான் விடுமுறை பெற்றுக் கொள்ள வேண்டும். காரணம், உன் கண்களின் நடனத்தில் நான் ஒளியைக் காண்பதே.

-நா

ன்பு என்கிற உறவினர் மூலம் நமக்குப் பல தொடர்புகள் ஏற்படுகின்றன. வாழ்க்கையை நாம் சுவைப்பதே இதன் காரணம்.

-படை