பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


பனி மூட்டத்தினால் தோல்வி கண்டாற்போல் தோற்றமளித்தாலும் மலை நிலை குலைந்து விடுவதில்லை.

- நா

இறைவா, நான் ஏன் உன்னைச் புகலடைந்திருக்கிறேன். தெரியுமா? உயர்ந்த ஆற்றலின் வழியில் வழி நடத்தப்படுவதற்காகவே.

-க.கொ

"ன்னை நான் என்றும் மறவேன்," என்று செம்மலர் செங்கதிரிடம் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளையில், அதன் இதழ்கள் மண்ணில் உதிர்ந்து விழுந்தன.

– மின்

திரண்ட மழைக் கொண்டல்கள் வானத்திலே முழங்கும்போது, கோடை மழை சுமந்து வரும் கீழைக்காற்றுப், புதர் நிலத்தின் மேல் பதறி வந்து. மூங்கில் காட்டிலே ஊதி முழங்குகின்றது!

ன்னை, ஏற்றருள்வாய், இறைவா, இக் கணம் மட்டுமா, என் நெஞ்சத்தின் இருண்ட கமுக்கங்களிலிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே.

- எ

"செங்கதிர்த் தேவே, உன் புகழை எப்படிப் பாடுவேன், உன்னை எப்படி வழிபடுவேன்?" என்றது அந்தச் சின்னஞ் சிறு மலர். 'உன் தூய்மையின் வழியே செங்கதிரின் விசை,

- ப.ப