பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

75


தாமரை தன் அழகை விண்ணுலகத்திற்கு அளிக்கிறது; புல் தனது பணியை மண்ணுலகத்திற்கு வழங்குகிறது.

- மின்

காலமாகிற கடலில் கிடைக்கும் ஒரு மணி நேர மகிழ்ச்சிக்காக என் நெஞ்சம் பரிதவிக்கிறது.

-ப.ப

நாம் புண்படுத்தப்பட்டோம் என்கிற உண்மையை நாம் ஒதுக்கி வைத்து விடலாம். ஆனால் நாம் துணிவுள்ளவர்களாக இருந்திருக்கிறோம் என்கிற உண்மைக்குச் சிறப்பான இடமுண்டு.

-எ.எ

ரவு கும்மிருட்டாயிருக்கிறது, என் இறைவா, வழிப் போக்கனுக்குக் கண் தெரியவில்லை. அவனுக்குக் கை கொடுத்திடுவாய்.

-எ

நிலத்திலிருந்து திரும்பிய காலை ஒளியின் எதிரொலிதான் பறவையின் பாட்டு.

-ப.ப

ன் இறைவா, என் நிழல்களிலிருந்தே என்னைக் காப்பாற்றிடு. இனி வரும், நாள்களில் எதிர்ப்படும் குழப்பங்கள், தடுமாற்றங்களிலிருந்தும் என்னைக் காத்திடு.

-எ