பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

79


உணர்வு நிலையின் முழுமையே அன்பு.

-சா

முடிவற்ற உள்ளுயிரே முடிவான உண்மை என்பதை நாம் எப்பொழுது உணர்கிறோமோ,அதனுடன் நாம் இணையும்பொழுது நம் உள்ளுயிரின் மகிழ்ச்சியை நாம் புரிந்து கொள்கிறோம்.

- படை

விண்மீன்கள் தோன்றுவதற்கு முன்னர் நிலவிடும் இருட்டுப்போல், தனது கடைசி இசை பிறக்கக் காத்திருக்கிறது, என் வாழ்க்கையின் வெற்று வேய்க்குழல்.

- மின்

மாந்தனை நாம் விரும்பினாலன்றி, மாந்தனை நாம் என்றுமே நன்கு புரிந்து கொள்ள முடியாது.

-சா

எல்லாப் பொருள்களும் உயிர். நாம் சார்ந்த கண் ணோட்டத்தில் தன் போன்றே இருக்கிறது என்பதை உணரும் பொழுதுதான், உலகம் பற்றிய நம் உணர்தல் முழுமை பெறுகிறது.

-படை

உனது உலகிற்கு என்னை இட்டுச் செல். என்னிடம் இருப்பவை யாவற்றையும் மகிழ்சியுடன் துறப்பதற்கான உரிமையை அளித்திடு.

-ப.ப