பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ஓ அரும்பே, வழிவிடு, வழி விடு, உன் நெஞ் சத்தைக் கீறிக் கொண்டு வழிவிடு. நெஞ்சத்தை விண்டு காட்ட வேண்டும் என்கிற விரைவு உணர்ச்சி உன்னிடம் புகுந்து விட்டது. இனி என்றுமே நீ அரும்பாக இருக்க முடியாதோ?

- நா

மண்ணோடு பிணைப்புண்டுள்ள மரத்திற்கு அதனிடமிருந்து பிரிந்திருப்பது விடுதலையாகாது.

- மின்

பாடங்களின் கோர்வையை அலைகளாகக் கொண்ட என் நெஞ்சம் செங்கதிர் பரந்திருக்கும் பகலாகிற பசுமை உலகை அணைத்திடத் துடிக்கிறது.

-ப.ப

அழிவில்லாத மேலுலகில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. ஆனால் மண்ணில் பூத்திருக்கும் மலர்களின் மாயத் தோற்றம் இறப்பு என்கிற நிலை மூலம் என்றும் போலிவுடன் இருக்கிறது.

-தோ

மாறி மாறி சேர்ந்து கொண்டும் பிரிந்து கொண்டுள்ளவையும், வாழ்க்கையுடன் பின்னப்பட்டுள்ளவையுமான நூலிழைகளால் தான் வாழ்க்கை என்கிற சித்திரத் திரைத்

துகில் நெய்யப்படுகிறது.

- மின்