பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

85


மண்ணிலும் விண்ணிலும் இருள் மண்டி ஒளி மங்கி வருகிறது. எந்தத் திசையில் செல்கிறோம் என்று கூடச் சொல்ல முடியவில்லை.

-வ.பி

உனது மெல்லிய குறு குறு பேச்சின் உட்பொருளை மலர்களிலும், வெஞ்சுடர் வெளிச்சத்திலும் நான் காண்கிறேன்.

-ப.ப

அடக்கத்தில்தான் இருக்கிறது அழகின் பேராற்றல் வேண்டும், அல்லது சிறு துளியும் கிடைக்கக் கூடாது. ஆகவே தான் அது எதையுமே கேட்பதில்லை.

-எ.எ

மேலுலகின் பகுதியை தன் உடன் பிறந்தோனாகக் காண்கிறது மல்லிகை.

-மின்

வாழ்க்கைக் களத்தில் துணைவர்களை நான் தேடிக்கொண்டிருக்கக்கூடாது. நான் நம்ப வேண்டியது எனக்குரிய வலிமையை மட்டுமே.

-க.கொ

இலையுதிர் கால பனிப் போர்த்திய நிலத்தின் ஆர்வம் துலங்கும் முகம் என் நெஞ்சத்தின் பேராவலைக் கிளர்ந்தெழச் செய்கிறது.

-எ