பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


வீடைப்பற்றி கவலை யாவற்றையும் அகற்றுகிறது பெண்ணின் புன்முறுவல்; அவளுடைய அன்பு இறைவனின் அருள்.

-ஈ

தொடுவதின் மூலம் நீ இழக்கலாம்; விலகி நிற்பதன் மூலம் நீ அடையலாம்.

-ப.ப

உன் குழலைக் கீழேவைத்திரு; என்னை அணைத்துக் கொள்ள உன் தோள்கள் கட்டற்றிருக்கட்டும்.

-நா

தனித்தொரு சிரிப்புடன் சிறகுகளாகிற வியப்புகளில் எனது எண்ணங்கள் தீப்பொறிகள் போன்று கவர்ந்து செல்லட்டும்.

-மின்

வெந்து கொண்டிருக்கும் மரக்கட்டை தீக்குழலில் தவித்தவாறே அலறுகிறது. இதுவே எனது மலர் மஞ்சம், எனது விடியல்.

-ப.ப

ஆழங் காணமுடியாத இரவின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் வண்ண நீர்க்குமிழிகளே நாள்கள்.

-ப.ப