பக்கம்:இரவு வரவில்லை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவ்வேளை நீவந்தாய்! மாவடுவோ? பூத்த
அழகியதா மரைகாய்த்தல் இங்குத்தான் கண்டேன்!
ஒவ்வாதே இச்செய்கை! முகம்மறைத்தல் கண்டே
உயர்வல்லம் சிரிக்குததோ! அதற்கென்ன செய்வாய்?
3


தேக்குநிறை மலைச்சாரல் சென்றலுத்து நின்றேன்;
சிற்றோடை நீரருந்தும் பிடிகண்டேன்; வந்தேன்;
பூக்காட்டு வண்டிரண்டு முழுமதியில் மொய்க்கும்
புதுமையினை நான்கண்டேன்; உனைக்கண்டேன்! என்ன
நோக்கத்தால் முகம்மறைத்தாய்? ஆனாலும், உன்றன்
நூலிடைக்கோ யார்காவல்? உயிர்பறிக்கும் அந்தப்
பூக்காத தாமரையின் இருமொட்டும் உன்றன்
போக்கெண்ணிச் சிரிப்பதற்கு நீஎன்ன செய்வாய்?
4





6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/15&oldid=1179677" இலிருந்து மீள்விக்கப்பட்டது