இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சன்னலிடைக் குளிர்காற்று வைகறையில் வந்து
தழுவுதடி என்னுடலை; தன்னுடலிற் பாயும்
முன்னிரவும் பின்னிரவும் நள்ளிரவும் கண்கள்
மூடவில்லை? ஊர்சென்றார்க் கிதைப்பற்றி என்ன?
தென்னையிலே, நொச்சியிலே சிறுபுள்ளின் பாட்டைச்
செவிகேட்க மறுக்கிறதே; விடிகின்ற காலை
என்னிலையை, என்னுயிரை, என்னுடலின் சோர்வை
இங்குள்ளார் அறிவாரோ? என்செய்வேன் தோழி!
4
11