இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
†சுகம்,பழுத்த வாழையிலே கொஞ்சுவதைக் கண்டேன்!
சொல்லுவதை யேசொல்லும் நீதானா கிள்ளை?
முகம்பழுத்த நெல்வயலின் பெருவெளியி னூடே
முன்பின்னாய் வரப்பேறி நாம்நடந்த காட்சி
அகம்பழுத்து விட்டதடி! நம்காதற் கெல்லை
அகல்வானும் நீள்கடலும் இவ்வுலகும் போதா!
நகம்பழுத்த முதுமையிலும், உயிர்போகும் போதும்
நானுன்னை யேகாண்பேன்! எங்கிருந்தால் என்னாம்?
4
†சுகம் - கிளி