இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. விழியோ? அல்ல! அல்ல!
தேனடை தொங்கும் மலையோரம்,
செறிந்த வாழைக் குலையோரம்
மான்போல் வந்து சிரித்தாளின்
மலர்விழி இரண்டும் கருவண்டே!
மான்போல் வந்து சிரித்தாளின்
மலர்விழி இரண்டும் கருவண்டே?
ஊனில், என்பில் உள்ளுறையும்
உயிரைப் பிரிக்கும் பெருந்தண்டே!
1
அல்லி சிரிக்கும் குளத்தோரம்,
அடர்ந்த ஆல மரத்தோரம்
மெல்லச் சிரித்து நடந்தாளின்
விழியோ குளிர்ந்த கருநீலம்!
மெல்லச் சிரித்து நடந்தாளின்
விழியோ குளிர்ந்த கருநீலம்?
அல்ல; அல்ல; உயிர்வாட்டும்
ஆறடி நீளக் கொடுஞ்சூலம்!
2
செந்நெல் விளையும் வயலோரம்,
சிறுசெடி பூத்த களத்தோரம்
அன்னம் பழிக்க நடந்தாளின்
அழகு விழியோ கருங்குவளை!
- 19