பக்கம்:இரவு வரவில்லை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளை பலபெற்ற இல்லாளும் - உடன்

பேச மனமின்றித் தூங்கிவிட்டாள்!

உள்ளக் கவலை நினைந்திருந்தேன்! - என்முன்

ஓடோடி வந்தாள்; சிரித்தாளே!6


சிரித்தாள்; சிரித்தேன்; செயல்மறந்தேன்! - என்

சிந்தையைக் கௌவிப் பறந்துபோனாள்!

இரவும் பகலும் அவளில்லை - என்றாலோ

என்னால் எதுவும் இயலாதே!7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/32&oldid=1179232" இலிருந்து மீள்விக்கப்பட்டது