இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 15. காளையின் கடிதம்
ஊரார் அலர்தூற்ற, உற்றார் பகைக்கக்,கண்
நீர்பெருக்கி நீவாட வேண்டாவே!-காராடும்
வானம் இடிந்தாலும், வாளெடுத்து வந்தாலும்
நானெதிர்ப்பேன்! நம்பி இரு!
1
சாதிக் குறைசொல்லித் தட்டிக் கழித்தாலும்
வாதாடி வந்துன்னை நானடைவேன்!-காதின்
குழைமின்னல் கண்டு குயில்பாயுஞ் சோலை
அழகே! நீ அஞ்சா திரு!
2
தாலி இழந்தாளைத் தாலிகட்டி இற்பேணல்
‘ஏலா’ தெனப்பெற்றோர் ஏசிடினும்,-வேலி
நறைகமழ் பூங்கூந்தல் நங்காய்! மணப்பேன்!
குறைகூறு வார்கூ றுக!
3
- 28