பக்கம்:இரவு வரவில்லை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. ஒடோடி வந்தாள்!

வானம் இருண்டது!
மாமழை தூறிற்று!

மாங்குயில் ஓடோடி வந்தாள்!-காலை
வானெழில் ஓடோடி வந்தாள்!

ஏனல் முதிர்ந்தது!
எங்கும் பசுங்காடு!

இனக்கிளி ஓடோடி வந்தாள்!-தமிழ்
இசைப்பாடல் ஓடோடி வந்தாள்
1

ஓடை முழக்கிற்று!
உயர்நாணல் ஆடிற்று!

ஓவியப் பேரெழில் வந்தாள்!-சுவைக்
காவியம் ஓடோடி வந்தாள்!

காடு தழைத்தது!
கழனி விளைந்தது!

கார்மயில் ஓடோடி வந்தாள்!-சங்கக்
கலித்தொகை ஓடோடி வந்தாள்!
2

குட்டை நிரம்பிற்று!
கொடிஅல்லி பூத்தது!

குளிர்தென்றல் ஓடோடி வந்தாள்!-இன்பக்
குளிர்தென்றல் ஓடோடி வந்தாள்!

பொட்டல் குளிர்ந்தது!
புட்கள் இசைத்தன!

போனவள் ஓடோடி வந்தாள்!-தமிழ்ப்
புறப்பாடல் ஓடோடி வந்தாள்!
3


35
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/44&oldid=1179515" இலிருந்து மீள்விக்கப்பட்டது