பக்கம்:இரவு வரவில்லை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கொல்லை முளைத்தது!
கூண்டுகள் தோன்றின!

கூன்பிறை ஓடோடி வந்தாள்!-புதுக்
குடும்ப விளக்கோடி வந்தாள்!

முல்லை படர்ந்தது!
முட்செடி பூத்தது!

முழுநிலா ஓடோடி வந்தாள்!-நம்
முத்தமிழ் ஓடோடி வந்தாள்!
4

வாழை பழுத்தது!
மாபலா காய்த்தன!

மாமணி ஓடோடி வந்தாள்!-நல்
மணமலர் ஓடோடி வந்தாள்!

தாழை மலர்ந்தது!
தடங்கடல் பாடிற்று!

தங்கச் சிலையோடி வந்தாள்!-நம்
சங்கத் தமிழோடி வந்தாள்!
5





36
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/45&oldid=1179520" இலிருந்து மீள்விக்கப்பட்டது