பக்கம்:இரவு வரவில்லை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் உரை

நான் கவிதை எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இற்றை நாள் வரை எழுதிய கவிதைகளில் இதுவரை வெளிவந்துள்ள கவிதை நூல்கள் ஒன்பதிலும் சேர்க்கப்படாமல் எஞ்சியிருந்தவைகளைத் தேடித் திரட்டித் தொகுத்தும் வகுத்தும் மூன்று நூலாக உருவாக்கித்தந்தனர் என் கெழுதகை நண்பர்கள். அவற்றுள் ‘சிரித்த நுணா’ என்னும் நூல் அன்மையில் வெளிவந்துள்ளது. ‘இரவு வரவில்லை’ என்னும் இந்த நூல் இரண்டாவதாகும்.

கவிதைகள் எல்லாம் அவ்வப் போது இதழ்களிலும், கவியரங்குகளிலும், பிறரால் வெளியிடப்பட்ட நூல்கள் மலர்கள் ஆகியவற்றிலும் வெளியாகித் தமிழ் கூறும் நல்லுலகத்து மக்களால் படித்துச் சுவைக்கப்பட்டவையே யாகும்.

இதனை வெளியிட்ட ஐயை பதிப்பகத்தார்க்கும், விற்பனை உரிமை ஏற்றுள்ளமனோன்மணி புத்தக நிலையத்தார்க்கும் என் நன்றி!

-வாணிதாசன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/6&oldid=1180149" இலிருந்து மீள்விக்கப்பட்டது