பக்கம்:இரவு வரவில்லை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. விரைந்து வா!

என்னை அறியாயோ ?

என்னிலையைக் காணாயோ ?

உன்னே விடயார்

எனக்குதவி ?-மின்னொளியே!

சங்கத் தமிழ்நூலும்,

சான்றோரும் உண்மையெனில்

எங்கள் குறைநீக்க வா !1


உண்மையைப் பொய்யென்(று)

உரைக்கவரும் தீயோரை

மண்ணில் நிலைக்க

விடுவதுவோ?-வண்ணக்

கலாப மயிலே!

கவியரசி! வெற்றி

நிலைநிறுத்த வாவிரைந்து நீ!2


பொய்யும் புளுகும்

நிறைந்தஇப் பூவுலகிற்

கையிற் பணமில்லாக்

காரணத்தால்-தையால்!

பகைமுளைத்த தந்தோ!

பகைவீழ்த்தி வெற்றி

நகைபுரிந் தாடு நடம்!3



53
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/61&oldid=1179492" இலிருந்து மீள்விக்கப்பட்டது