இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணொத்த தாய்மாரைத், தமிழ்நாட்டுக் காளை
கன்னியரை, மாணவரைப், பெரியோரை என்றும்
பண்ணொத்த மொழிபேசிச் சிரித்துவர வேற்றுப்
பரிந்தழைக்கும் திருஉருவும் நோய்நீக்கும் கையும்
மண்ணொத்துப் போனதுவோ! தமிழ்நாட்டுச் சொத்தே!
மறக்குலத்து மணிவிளக்கே! தருமாம்பாள் அன்னாய்!
புண்ணொத்துப் போனதுவாம் தமிழ்நாட்டார் உள்ளம்!
புத்தொளியைப் புத்துணர்வை இழந்ததந்தோ நாடே!
4
65
இ.வ.-5