பக்கம்:இரவு வரவில்லை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. தங்கத் தாமரை மலர்ந்ததுவே!

பொங்கும் கடல்மேல் தலைநீட்டிப்

புகுந்த வாடை இருளோட்டிப்
பூவை மலர்த்தி அழகூட்டிப்
பொன்னொளி வீசிக் கைந்நீட்டித்

தங்கத் தாமரை மலர்ந்ததுவே!

தைமுதல் நாளும் பிறந்ததுவே!
தைமுதல் நாளும் பிறந்ததுவே
தமிழர்க் கின்பம் நிறைந்ததுவே!

மங்காத் தமிழர் பெருநாளாம்

வந்த பொங்கல் புதுநாளாம்!
வந்த பொங்கல் புதுநாளாம்
வாழ்வ ளித்த திருநாளாம்!

எங்கும் பொன்னும் பொன்னொளியே!

எழுந்தது:பொங்கல் வாழ்த்தொலியே!
எழுந்தது பொங்கல் வாழ்த்தொலியே
இல்லந் தோறும் சிரிப்பொலியே!1


குட்டை குளங்கள் பூப்பூக்கக்

கொடியும் செடியும் காய்காய்க்கக்
குன்றத் தருவி முழவார்க்கக்
குயிலும் வண்டும் யாழ்சேர்க்கத்

தட்டைப் போல வானெழுந்து

தங்கத் தாமரை மலர்ந்த்துவே!
தங்கத் தாமரை மலர்ந்ததுவே
தமிழர்க் கின்பம் நிறைந்ததுவே!


73
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/79&oldid=1179444" இலிருந்து மீள்விக்கப்பட்டது