இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. எல்லோரும் செத்தவரோ?
எத்தனையோ மக்கள்
இயற்கை அடைந்தார்கள்!
செத்தவர்கள் எல்லோரும்
செத்தவரோ?-இத்தரையில்
கண்ணப்ப! கற்றறிந்தோர்
கைகள் அவரவர்கள்
கண்ணப்ப வேநெஞ்சங் காண்!1
பிறப்பதுவும், வாழ்வதுவும்,
பின்னர் உலகில்
இறப்பதுவும் உண்மை:
எனினும்,-மறப்பரிய
கண்ணப்ப! சைவத்துக்
கண்ணப்ப! நீர்பிரிந்தீர்!
கண்ணப்ப வேயிழந் தோம்!
2
- 75