இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 6. பாரிக்குத் தாலாட்டு
சீர்மேவும் கீழ்வானில்
- சீய்த்தெழுந்த செஞ்சுடரே!
கார்மேவும் குன்றம்
- தவழ்ந்துவரும் மென்காற்றே!1
உச்சிமலைத் தேனே!
- உயர்சாரல் நீரருவி!
பச்சைமலைப் பாறை
- பயிலும் புலிக்குட்டி!2
சாரல் மலைவாழும்
- சந்தனமே! காரகிலே!
வேரில் பழுத்த
- பலாவே! விடிவானே!3
பிள்ளைக் குறைதீரப்
- பிறந்தவனே! பேரழகே!
வள்ளலே! பாரி
- மகனே! நீ கண்ணுறங்கு!4
கொம்பு முளைக்காத
- கொல்லேறே! என்னுயிரே!
செம்பொன் மருதத் .
- திருவே! சிறுகிளியே!5
- 79