பக்கம்:இரவு வரவில்லை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. பாரிக்குத் தாலாட்டு

சீர்மேவும் கீழ்வானில்

சீய்த்தெழுந்த செஞ்சுடரே!

கார்மேவும் குன்றம்

தவழ்ந்துவரும் மென்காற்றே!1


உச்சிமலைத் தேனே!

உயர்சாரல் நீரருவி!

பச்சைமலைப் பாறை

பயிலும் புலிக்குட்டி!2


சாரல் மலைவாழும்

சந்தனமே! காரகிலே!

வேரில் பழுத்த

பலாவே! விடிவானே!3


பிள்ளைக் குறைதீரப்

பிறந்தவனே! பேரழகே!

வள்ளலே! பாரி

மகனே! நீ கண்ணுறங்கு!4


கொம்பு முளைக்காத

கொல்லேறே! என்னுயிரே!

செம்பொன் மருதத் .

திருவே! சிறுகிளியே!5


79
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/85&oldid=1179415" இலிருந்து மீள்விக்கப்பட்டது