இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அந்நாளில் பிள்ளை
- அயர்ந்துறங்கக் கேட்டதுண்டே!
இந்நாளில் தென்னவரோ,
- என்மகனே! பாரியே!18
செந்நெல் விளைவிருந்தும்
- தெங்கிருந்தும் மாவிருந்தும்
கன்னல் விளைவிருந்தும்
- காடிருந்தும் வீடிருந்தம்19
கையில்லா ஊமையர்போல்
- கால்வயிற்றுக் கெட்டாது
வையத்தார் ஏச
- வடக்குக் கடிமைகளாம்!20
தாய்நாட்டை நீபிறந்த
- இந்நாட்டை உன்நாட்டைப்
பாய்புலியே! மீட்கப்
- பயிலுமிட மோதொட்டில்?21
‘எத்தனைநாள் இன்னும்
- அடிமைநாம்’ என்றேநீ
கத்தி அழுகின்றாய்?
- கைகால் உதைக்கின்றாய?22
அண்ணா வழிவந்தோர்
- ஆண்சிங்கத் தம்பிமார்கள்
எண்ணா யிரம்பேர்
- இருக்கின்றனர்; கண்ணுறங்கே!23
- 82