பக்கம்:இரவு வரவில்லை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்நாளில் பிள்ளை

அயர்ந்துறங்கக் கேட்டதுண்டே!

இந்நாளில் தென்னவரோ,

என்மகனே! பாரியே!18


செந்நெல் விளைவிருந்தும்

தெங்கிருந்தும் மாவிருந்தும்

கன்னல் விளைவிருந்தும்

காடிருந்தும் வீடிருந்தம்19


கையில்லா ஊமையர்போல்

கால்வயிற்றுக் கெட்டாது

வையத்தார் ஏச

வடக்குக் கடிமைகளாம்!20


தாய்நாட்டை நீபிறந்த

இந்நாட்டை உன்நாட்டைப்

பாய்புலியே! மீட்கப்

பயிலுமிட மோதொட்டில்?21


‘எத்தனைநாள் இன்னும்

அடிமைநாம்’ என்றேநீ

கத்தி அழுகின்றாய்?

கைகால் உதைக்கின்றாய?22


அண்ணா வழிவந்தோர்

ஆண்சிங்கத் தம்பிமார்கள்

எண்ணா யிரம்பேர்

இருக்கின்றனர்; கண்ணுறங்கே!23


82
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/88&oldid=1179409" இலிருந்து மீள்விக்கப்பட்டது