இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. பாரி வாழ்க!
பொன்னே! புதுவாழ்வே!
- புத்தமிழ் தே!பாரி!
கன்னல் சுவையீன்ற
- கற்கண்டே!-மன்னிக்
குலச்சுடராய் நின்று
- குடிப்புகழை நாட்டி
நிலவுலகில் வாழ்க நிலைத்து!1
பிள்ளைக் குறைதீரப்
- பிறந்த சிறுபுலியே!
கிள்ளையே! பாரி!
- சிறுகுழந்தாய்!-வெள்ளமிகு
பொன்னிப்பே ராற்றுப்
- பொடிமணல்போல் பல்லாண்டு
மன்னிநீ வாழ்க மகிழ்ந்து!2
நம்பிதிரு மகனே!
- நலலாள லலி தாவின்
அன்பின் விளைவே!
- அருந்தமிழர்-இன்ப
இலக்கியமே! பாரியே!
- என்றென்றும் நாட்டில்
தலைசிறந்து வாழ்க தழைத்து!3
- ★
- 88