பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சர் ஐசாக் கியூட்டன்

9


ருக்குப் பெருந்தொல்லையாக இருந்தாலும், அவருக்குப் பூனே களைப் பிரிந்திருக்க மனம் வரவில்லை.

தாம் உறங்கும் பொழுது, “கதவுகளும் தாளிடப்பெற்றிருத்தல் வேண்டும் : பூனைகளும் தம்முடன் இருத்தல் வேண்டும். தம் உறக்கமும் கலேயக் கூடாது; பூனைகளும் தம் விருப்பம் போல் வெளியில் சென்று திரும்பி வரவேண்டும். இவற்றிற்கு ஒரு வழிவகை அமைக்க வேண்டும்” என்று அவர் சிந்தித்தார். இறுதியில் ஒரு தச்சன வருவித்துத் தம்முடைய அறைக்கதவில் பெரிய பூனை செல்வதற்கு ஒரு பெரிய துளையும், அதன் குட்டிப் பூனை செல்வதற்கு ஒரு சிறிய துளையும் ஆக இரண்டு துளைகளை இடும்படி தச்ச னிடம் சொன்னர். அதைக் கேட்ட தச்சன், “ஐயன்மீர், பெரிய பூனே செல்லும் பெரிய துளையின் வழியாகவே அதன் குட்டியும் சென்று விடுமே! இரண்டு துளைகள் தேவை இல்லை; ஒன்றே போதும்” என்ருன். தச்சனின் அறிவை மெச்சி அவனுக்குச் சன்மானம் வழங்கினர் அறிஞர் கியூட்டன். இச்சிறு நிகழ்ச்சியில் தம் அறிவு சரியாகச் செயற்பட வில்லையே என்று அவர் எண்ணி ஏங்கினர்.

இந்த அறிஞர் 1673 இல் தாம் கண்டறிந்த கவர்ச்சி விதியை (Law of Gravitation) விளக்கினர்; இந்த அகிலத்திலுள்ள பொருள்கள் யாவும் பிற பொருள்களைக் கவர்ந்து கிற்கின்றன. இவ்வாறு கவர்ந்து கிற்கும் விசையை நியூட்டன் ஈர்ப்பு ஆற்றல் (Gravity) என வழங்கினர். இந்த ஈர்ப்பு ஆற்றல் கவர்ந்து கிற்கும் இரு பொருள்களின் பொருண்மைகளின் (Masses) பெருக்கற் பலனுக்கு (Product) நேர் விகித சமப் பொருத்தத்திலும், அவற்றின் இடையிலுள்ள தூரத்தின் வர்க்கத்திற்குத் (Square) தலைகீழ் விகித சமப் பொருத்தத்திலும் உள்ளது என்று எடுத்துக்காட்டினார்.