பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. பூமியின் துணைக்கோள்கள்

நினைப்பிற்கெட்டாத நெடுங்காலமாகவே பூமியைச் சந்திரன் தொடர்ந்து சுற்றிக்கொண்டுவருகின்றான். சந்திரன் இயற்கையிலுள்ள ஒரு துணைக்கோள். 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாளிலிருந்து பூமிக்கு இரண்டு சந்திரர்கள் அமைந்தனர். இரஷ்யர்கள் அனுப்பிய ஸ்புட்னிக்-I என்ற செயற்கைச் சந்திரன் பூமிக்கு மற்றொரு பிள்ளையாக, இயற்கைச் சந்திரனுக்கு ஒரு தம்பி போல, அமைந்தது. அது பூமியை நாள்தோறும் சுற்றிவரத் தொடங்கியது.

அந்த நாளிலிருந்து மனிதனால் படைக்கப்பெற்ற எந்தப் பொருளும் மணிக்கு 6,800 மைல் வீதம் பிரயாணம் செய்யவில்லை. ஆயினும், சூரியனது மறைவிற்குப் பிறகு அல்லது விடியற்காலத்திற்கு முன்பதாகச் சூரியனது ஒளி பளபளப்பான அதன் புறப்பரப்பின்மீது படுங்கால் அது நமது ஊனக் கண்ணுக்கே தென்பட்டது; யாதொரு பொறியினாலும் இயக்கப்பெறாது தானாகவே அது மணிக்கு 18,000 மைல் வீதம் கீற்றுப் போடுவதுபோல் நகர்ந்து கொண்டிருந்தது.

அஃது அந்த இடத்தை எங்ஙனம் அடைந்தது? எது அதனை விழாமல் தாங்கியது? இதனைச் சிறிது விளக்குவோம்.

பூமிக்குமேல் 200 மைல் உயரம் அளவு ஒரு மலை இருப்பதாகவும், அங்குப் பூமியின் வளி மண்டலம் இல்லாததாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த மலையுச்சியின் மீது ஒரு பீரங்கி இருப்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். பூமியின் கவர்ச்சி ஆற்றலின் இழுப்பின்