13 O. இராசராச சேதுபதி
266
மண்ணுள வேந்தர் தொழுஞ்சேது காவலன் வண்புலவோர் எண்ணுள கீர்த்தி கிறைராச ராச னெழில்வரைவாய்ப் பெண்ணுளர் யாரையும் வெல்லிய லாயுனைப் பேணிக்கண்டார்
க்ண்ணுள ரென்றுசொல் லார்சூத ரென்றே கழறுவரே.
மண் உள வேந்தர் - பூமியை ஆளும் மன்னர்; வ ண் புல ேவார் எண்ணுள கீர்த்தி - தமிழ்வளம் .ெ ப ற் ற வ ர் கருதிப் போற்றும் புகழ்: எழில் - அழகு; பெண்ணுளர் யாரையும் வெல் இயலாய் - பெண்பாலார் எல்லாரையும் வெல்லும் தன்மை படைத்துள்ளவளே; விளி; பெண்கள் ந ா ய கம் என்றபடி. கண்ணுளர் - இரக்கமுற்றவர், கண்பெற்றவர்; சூதர் - வஞ்சகர்: சூதுகாய் போன்ற முலையினையுடையவர்; கண்ணை மறைத்தமையால் கண்ணுளர் என்று சொல்லார் என்று குறிப்பிட்டான்
БT&MT+55 .
267
தடமார் வயற்செம்பி நாடாள் வரோதயன் றண்டமிழர்க் கிடமான வ னெங்கள் சீராச ராச னிருங்கிரிவாய் விடமோர் புறத்தும் படமோர் புறத்தும் விதந்துகொண்டு தட வாக மீதிரு வன்னக மிங்குத் தலைப்படுமே.
தடம் - தடாகம்; ஆர் - நிறைந்த; வரோதயன் - தெய்வ வரத்தால் பிறந்தவன்; விடம் - நஞ்சு, கண் ; படம் - பாம்பின் படம், அல்குல் : தடவா கமீதில் - பெரிய மேட்டின் மேல்; இரு வல் நாகம் - இரண்டு வலிய பாம்பு; தலைப்படும் - வெளிப்படும்; எதிர்ப்பட்டுத் தோன்றும் . த ஆகம் மீது - பரந்த மார்பின் மேல்; இருவல் நாகம் - இரண்டு வலிய யானை; அதாவது யானைத் தந்தம் போன்ற முலை.
2 G8
மண்ணிய டுை பலவுக் தொழுது வழிபடுஞ்சீர்ப் புண்ணிய காடு புரக்கின்ற சேது புரந்தரன்யாம் பண்ணிய கற்றவஞ் சீராச ராசன் பருப்பதத்தே கண்ணிய ரல்லிர் மலையத் தனை தனங் கண்டுமென்னே.
மண் இயல் நாடு - உலகில் உள்ள நாடு; நாடு இங்கே ஆகு பெயராய் நாட்டாரைக் குறித்தது. தொழுது வழிபடும் - வணங்கி வழி