ஒரு நாள் உபாத்தியாயரும், மாணவனும் வெளியே உலவச் சென்றனர். அவர்கள் வயல்களை அடைந்தார்கள். ஒரு வயலுக்கு அருகில், பழைய செருப்புகள் கிடந்தன. அவற்றை ஆசிரியரும், மாணவனும் கண்டனர். அவை அந்த வயலில் உள்ள கூலியாளுடையவை என்று அவர் நினைத்தனர்.
மாணவன் ஆசிரியரை நோக்கி, ‘ஐயா, நாம் ஒரு வேடிக்கை செய்யலாம்?’ என்றான்.
உபாத்தியாயர், ‘என்ன வேடிக்கை?’ என்று வினவினார்.
கோவிந்தன், ‘ஐயா, நாம் இந்தச் செருப்புகளை எடுத்துப் போய் விடலாம். நாம் இருவரும் அதோ உள்ள புதரண்டை ஒளிந்து கொள்வோம். வேலையாள் வந்து செருப்பைக் காணாமல், என்ன செய்கிறான் என்று பார்ப்போம்,’ என்றான்.
ஆசிரியர், ‘கோவிந்தா, நாம் அவ்வாறு செய்யலாகாது; அவன் மனம் வருந்தும்படி செய்வது தகாது. யான் கூறும் விதம் செய்; நீ செல்வந்தரின் ஏக புத்திரன். நீ இந்தச் செருப்புகளை எடுத்துச் சென்று வேடிக்கை பார்ப்பதை விட, இவற்றில் இரண்டு ரூபாய்களை வைத்து விடு. அக்கூலியாள் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்,’ என்று கூறினர்.
கோவிந்தன் ஆசிரியர் சொன்னவாறே, இரண்டு ரூபாய்களைச் செருப்பில் வைத்தான.
63