பக்கம்:இராஜேந்திரன்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 இராஜேந்திரன்

பணம் செலவு செய்துவிட்டுப் பெரியவர்கள் கஷ்டப்பட்டுத் சம்பாதித்து வைத்த சொத்துக்களே எல்லாம் விற்றுத் தொலைத்து, அத்துடன் கி ற்காமல் மார்வாடிகளிடமும், நாட்டுக் கோட்டை செட்டிகளிடமும் கடன் வாங்கிவிட்டு, அவர்கள் கேட்டுக் கேட்டு அலுத்த பின் கோர்ட்டில் சம் மன் செய்து வாரன்டு எடுத்து ஆளேத் தேடும்போது, இப் படி ஒளிந்துகொண் டிருப்பது வழக்கம். தாங்களும் இப் போது அப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலைமையில் இருக்கி நீர்கள்போல் இருக்கிறது.

பாவம் என்ன செய்யலாம் தாங்கள் அதைப்பற். றிக் கொஞ்சமாவது பயப்பட வேண்டிய காரணமே இல்லை. எங்கள் எஜமான் வீட்டில், என்னேத் தவிர வேறு யாரும் வரவே மாட்டார்கள். ஒரு காக்காய், குருவிகூட உள்ளே காடாது. பாவம் இவ்வளவு சொற்ப வயதுக்குள் தாங்கள் இப்பேர்ப்பட்ட கஷ்டத்திற்கு உள்ளர்கிவிட்டிர்களா தங்கள் பேரில் கொஞ்சமாவது தப்பிதம் இல்லை. இங்கே வயதுப் பிள்ளைகளேக் கெடுப்பதற்கே ஒரு கூட்டத்தார் இருக்கிருர் கள். அவர்க்ள் கையில் ஒருவர் சிக்கிக்கொண்டால் பின் குல் இன்சால்வென்ட் கோர்ட்டுக்குப் போகும் வரையில் விடவேமாட்டார்கள்.

மேலும் இச் சென்னேயில் வயதுப் பிள்ளைகளைக் கெடுப் பதற்கென்றே பலவிதமான சாதனங்கள் அமைந்திருக்கின் றன. சென்னேயில் வால்டாக்ஸ் ரோட்டில் ஒரு நாடகப் பந்தலும், சால்ட் கொட்டாரில் ஒரு நாடகப் பந்தலும், செங்காங் கடையில் ஒரு நாடகப் பந்தலும், சிந்தாதிரிப்பேட் டையில் ஒரு நாடகப் பந்தலும், கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள செளந்தரிய மஹால் என்னும் நாடகப் பங் தலும், விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு நாடக சாலையும், தங்கசாலைக்கு அருகாமையில் ஒரு நாடகப் பந்தலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/223&oldid=660603" இலிருந்து மீள்விக்கப்பட்டது