பக்கம்:இராஜேந்திரன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஆச்சரியமான திருட்டு 33

இமன்ட்) எழுதி அதைப் பதிவுசெய்து (ரிஜிஸ்டர் செய்து) வைத்திருக்கிருர் ஆகையால் அதைப்பற்றி இனி, தாங்கள் ட்சேபிக்கவாவது வேறு வார்த்தை பேசவாவது கூடாது. அதிருக்கட்டும்; கான் கேட்ட மற்ற விஷயங்களேப் பற்றிச் சொல் லுங்கள். - .

ராகவன்: அன்பரே! நமது பூரீனிவாசன் தனது ஆள் மூலமாகவே அநேகமாக உண்டியல்கள் கொடுத்து ரொக் கம் பெற்றுப் போலுைம் அந்த ரொக்கத் தொகைகளெல் லாம் அநேகமாக நம்மிடம் த ற்காலம் பெருத்த லேவாேதவி செய்யும் கோபாலாசாரியார் அண்ட் சன்ஸ்களிடம் போய்ச் சேர்ந்ததாகத் தெரிகிறது. நான் பல தடவைகளில் கோபாலாசாரியார் அண்ட் சன்ஸ்களிடம் போய்ச் சொந்தக் தாரரைப் பார்க்க முயன்றதில் நான் போகும்போதெல்லாம் அவர்கள் வீட்டிலில்லேயென்றும், ஏதாவது விசேஷம் இருந்தால் எழுத்து மூலமாய்த் தெரிவிக்கும்படிக்கும் அவர்கள் மானேஜர் பேசும் மாதிரியிலிருந்து நாம் அவ ரைப் பார்க்க விரும்புவதைப்பற்றிக் கோபாலாசாரியாருக் குப் பிரியமில்லாத பாவனையாய்த் தெரிகிறது. இதில் ஏதோ கபடம் இருப்பதாகவும் காண்கிறது. நான் சுமார் இருபது தடவைக்குமேல் சென்று பிரயத்தனம் செய்தும் பயன்படாமற் போனதாலும், ஒரு நாள் கோபாலாசாரி நிச்சய மாய் வீட்டிலிருக்கிருரென்று தெரிந்து நான் போயும் அவர் வீட்டில் இல்லையென்று பொய் சொன்னதாலும், அது முதல் நான் போவதில்லை. அதன் பேரில் நமது பூதிணிவாச னுக்குக் கொடுக்கும் நோட்டுகளின் கம்பர்களே எழுதிக் கொண்டு அந்த ங்ோட்டுகள் யார் மூலமாய்த் திரும்ப அனுப்பப்படுகின்றன என்பதை அதிகக் கஷ்டமெடுத்துக் கொண்டு எல்லாப் பாங்குகளிலும் ஆள்கள் மூலமாய் விசா சித்து அறிந்ததில் நமது பாங்கிலிருந்து வாங்கின இரண் டொரு நாட்களுக்குள் கோபாலாசாரியார் அண்ட் சன்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/82&oldid=660462" இலிருந்து மீள்விக்கப்பட்டது