பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 TT ~, 逸。 இவர்கள், நமது அண்டை மாநிலமான ஆந்திரத்தை தாயகமாகக் கொண்டு இருந்ததை வடதிசை மருங் கின், மருங்கின் வடுகு வரம்பாக எ ன காக்கை பாடினியார் போன்ற சங்ககாலப் புலவர்களது பாடல் கள் புலப்படுத்துகின்றன. இவர்களது பூர்வீகம் இன் திைய விஜயநகருக்கு வடக்கே உள்ள பகுதியென சொல்லப்படுகிறது. பாமினி சுல்தான்களின் ஆட்சி பினல் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் பிரிவினர் ராயர் களது ஆரசியலில் தஞ்சம் பெற்றனர். பின்னர் அவர் களது சார்பான மதுரை அரசில் குடிபுகுந்து திண்டுக் கல்லுக்கு - வடக்கிலும், தெற்கிலும், மேற்கிலும், பரவலாக குடியேற்றங்களை அமைத்தனர். 14-ம் நூ ம் ருண்டின் இறுதியில் மதுரை சுல்தான்களின் ஆட்சியை முழுமையாகக் களைந்த கம்பள உடையார் என்ற வடுக மன்னரது ஆட்சியில், ஆந்திரத்திலிருந்து வடுகர்கள் தென்பாண்டிச் சீமைக்கு குடிபெயரத் துவங் கினர். மதுரையில் விஜயநகர பேரரசின் பிரதிநிதி யாக இருந்த விகவ நாத நாயக்கர் ஆட்சிக்காலத்தி லிருந்து கி. பி. 1736 வரை இவர்களது குடியேற்றம் பரவலாக ஏற்பட்டது. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அவர் களது குடியேற்றம் 15-ம் நூற்ருண்டில் துவங்கியது. மைசூர்ப் படையெடுப்பிலிருந்து மதுரையை மீட்டு உதவியதற்காக இராமநாதபுரம் மன்னர் ரகுநாத திருமலைச் சேதுபதியை மதுரை மன்னர் திருமலை தாயக்கர், பாராட்டி பரிசளித்துபெருமைப்படுத்தினர். இதல்ை ஏற்கனவே முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் மதுரைக்கும் இராமநாதபுரத்திற்கும், இடையில் ஏற்படுத்தப்பட்ட நல்லுறவுகள் வலுப் பட்டன. இராமநாதபுரம் சீமையிலும் நாயக்கர்களது