பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 பிள்ளை அவரையும் அவரது இரண்டு சீடர்களையும் கைது செய்தனர். மங்களத்திலும், காளை யார் கோ வி லிலும், பாகனியிலும் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். பின்னர் இராமநாதபுரத் திற்கு அழைத்துச்சென்று மன்னர் அவையில் நிறுத்தி தண்டனை வழங்குமாறு அரசருக்குப் பரிந்துரைத் 95 эст гr. துறவியின் சமயக் கருத்துக்களைப் பொறுமையாக கேட்டறிந்தமன்னர் கிழவன் சேதுபதி, அந்தக் கருத் துக்கள் மறவர் சீமைக்கு ஒவ்வாதன என்று உணர்ந் ததுடன், அவரை நமது சீமையினின்றும் உடனே வெளியேறுமாறும் உத்தரவிட்டார். உடல் நலிவுற்று இருந்து துறவி அருளானந்தர் தமது தாயகமான போர்ச்சுகல் நாட்டிற்கு திரும்பினுர். ஆனால் அவரது உள்ளம் மறவர் சீமையில் நிலைத்து இருந்த து . மீண்டும் தமது தொண்டை அங்கு தொடரவும் அந்தப் பணிக்குப் பகரமாக தமது அருமை உயின்ர யும் வழங்குவதற்கும் துணிவு கொண்டது அந்த துறவியின் உள்ளம். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மறவர் சீமைக்கு திரும்பி வந்தார். மக்கள் மனம் உவந்து மகத்தான் வரவேற்பு வழங்கினர். தேவகோட்டைக்கு அண்மை யில் உள்ள முன்னி என்ற சிற்றுாரில் தங்கி தமது சேவையில் ஈடுபட்டிருந்தார். சேதுபதி மன்னரது உறவினரும் சிறுவல்லிபாளையக்காரருமான திரையத் தேவரும் அவரது உறவினர்களும் கிறித்துவ மதத்தை ஏற்றது அருளானந்தருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆல்ை இதே நிகழ்ச்சியே அவரது வாழ்க்கையை முடிவிற்கு கொண்டு வரவும் தூண்டு கேர்லாக அமைந்து விட்டது. திரையத் தேவரது மத மாற்றம் சேதுபதி மன்னருக்கு பெரிய கேள்விக் குறியாகப் பட்டது. - I-- கிறித்துவ சமயத்தைத் தழுவிஞ்ல், அவன் கிறித்து வகை மாறுவது மட்டுமல்லாமல், கிறித்து நாடான போர்ச்சுகல் மன்னர்து குடிமகளுக்வும் ஆகிவிடும் ஆந்தக் காலக் கட்டத்தில் இந்த நாட்டின் குடிமகன்