பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செப்டம்பர் அக்டோபர் வாக்கில் நிறைவேற்றியவன் கர்னல் மில்லர் என்பவகுைம். O மறவர் சீமையின் மகுடங்கள் வீரத்தின் விளைநில்மான மறவர் சீமையின் மகுடங் களாக விளங்குவது அவர்களது அரண்கள். மாற்ருருக்கு மண்டியிடாத அவர்களது மனப்பாங்கை வெளியிடும் வகையில் மண்ணுலும் கல்லாலும் அமைக்கப்படும் இந்தக் கோட்டைகள் மக்களது மானங்காக்கும் மகத்தான சின்னங்களாக க டந் த காலங்களில் கருதப்பட்டு வந்தன. இராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பதின்ைகாம் நூற்ருண்டில் பிற்காலப் பேரரசு நிலை குலேந்தவுடன், ஆங்காங்குள்ள வேளிர்களும், குறுநில மன்னர்களும் வலிமை மிக்கவர்களாக விளங்கினர். அட்போதை ய குழட்பமான அரசியல் சூழ்நிலையும் அவர்களது தன்னிச்சையான போக்கிற்குத் துணை நின்றன. இதல்ை அவர்கள் ஆங்காங்கு தங்கள் அதிகார வரம்பை நிலைநாட்ட சிறுசிறு கோட்டைகளை அமைத்து சிற்றரசர்கள் போல வாழ்ந்தனர். அவர்களைச் சார்ந்த மக்களும் அவர் களுக்கு ஆட்பட்டவர்களாக இருந்தனர். பதினறு பதினேழாம் நூற்ருண்டுகளில் மறவர் சீமையின் அதிபதியாக விளங்கிய இராமநாதபுரம் சேதுபதி