பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 38 இராமன் - பன்முக நோக்கில் சீற்றத்தை எவ்வாறு தணித்தான்? இலக்குவன் அருகே வந்த அஞ்சன மேனியான் ஒன்றும் அறியாதவன் போல, "என் அத்த! என் இமையோரை முனிந்திலாதாய், சன்னத்தன் ஆகித் தனு ஏந்துவதற்கு ஏது?” என்று வினவுகிறான். இமையோரை முனிந்திலாதாய் என்று கூறுவது ஒரு துண்மையான பொருளை உடையதாகும். "இந்த மண்ணுலகத்தில் நீ கோபிப்பதற்குரிய செயலை யாரும் செய்யவில்லை, செய்யத் துணியமாட்டார்கள் என்பதை நான் அறிவேன். ஒருவேளை தேவர்கள் மேல் சினந்தாயோ? என்று எண்ணினேன். உன்னைப் பார்க்கும்பொழுது நீ இமையவர்மேலும் கோபப்படவில்லை என்பது நன்கு தெரிகிறது. அப்படி இருக்க வில்லை ஏந்துதற்குக் காரணம் என்ன?" என்று கேட்கிறான். இவ்வாறு சொல்வதன் நோக்கம் இம் மண்ணுலகில் யார் மேலும், இப்பொழுது நடைபெற்ற ஒன்றிற்குக் குற்றம் சுமத்த முடியாது என்ற குறிப்பை தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறான், அறத்தின் மூர்த்தி (1727). தனு ஏந்துதற்குக் காரணம் என் என்று வினவிய பெரிய பெருமாளுக்கு இளைய பெருமாள் கூறும் விடை அவன் மனப்பாங்கைத் தெற்றென விளக்குகிறது. "TamilBOT (பேச்சு) 05:27, 26 பெப்ரவரி 2016 (UTC) நெஞ்சம் மையின் கரியாள்எதிர், நின்னை அம்மெளலி சூட்டல் செய்யக் கருதி, தடை செய்குநர் தேவரேனும், துய்யைச் சுடுவெங் கனலின் கடவான் துணிந்தேன்" - கம்ப 1728

  1. 4牌喇事邸铝调8始确响娜甲得帕协W- உலகு ஏழினொடு ஏழும், மன்னர் குலக்காவலும், இன்று, உனக்கு யான்தரக்கோடி' என்றான்"

. கம்ப 1729