பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ே 249 ми»м»ма»яявная внимкими княж вивиаини вики нева взваниям вк aw-wa-n sweak****-----s: நெடுஞ் செருக் களத்தின் என்னைக் கொன்றாய் நீ அன்றோ? நின்னைக்கொல்லுமேல், குணங்கள்தீயோன். . கம்ப. 6923 எந்தச் சுக்கிரீவன் நன்றி மறந்தான் என்பதற்காக அவன் தவற்றைக் கண்டிக்கப் போகிறேன் என்று இலக்குவனிடம் பேசினானோ அதே சுக்கிரீவன் திருவடிகளில் வீழ்ந்து மன்னிப்பு வேண்டிய பின்னர், அவன் பிழைகள் அனைத்தையும் மன்னித்ததோடன்றி 'நீ பரதனை ஒப்பாய்' என்ற பட்டமும் தந்தான் இராகவன். உலகம் தோன்றிய நாளில் இருந்து ஒரு சிலரை நாடி அடைக்கலம் என்று கூறிக்கொண்டு வருபவர்களை இயன்ற அளவு முயன்று அவர்கட்குப் பாதுகாப்புத் தருவதை நாம் கேட்டதுண்டு. இராமகாதையில்தான் சரணாகதி தத்துவம் இவ்வளவு விரிவாகவும், ஆழமாகவும் பேசப்படுகிறது. வீடணன் அடைக்கலம் என்று வந்தபொழுது அவனுக்கு, அடைக்கலம் தந்தே தீர வேண்டும் என்று சொல்லவந்த இராகவன், "இன்றுவந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக் கொன்று வந்தான் என்று உண்டோ? அடைக்கலம் கூறுகின்றான்; துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே, பின்னைப் பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ?" . கம்ப 6470 என்று கூறத் தொடங்கி அடைக்கலம் கேட்பவன் தன் தந்தை தாயைக் கொன்றவனாக இருப்பினும் அடைக்கலம்