பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 38 இராமன் - பன்முக நோக்கில் 哆始兹暖祖ss磁经曝德曼经叠距朔s曼aes巴sa桑姆箱恐町兹弘岭兹豪担翠s够琛晚碘甲姆é坦零担磁多资甲é叠 碍如燃se眼部的影曲姆叫感碍龄 விளைவு உன்னுவாய் அல்லை; போத மைந்தனை ஆதலின், எல்லை அற்ற, இடர் தருவாய்' என்றான்." - கம்ப 1832 இராமன் கூறிய இச்சொற்கள் பொருத்தமுடையனவா என்று சிந்திக்க வேண்டும். காட்டில் ஆண்கள்மட்டுமன்றிப் பெண்களும் வாழ்கின்றார்கள். மாமுனிவர்களின் மனைவிமார்கள் பலரும் காட்டிலேதான் வாழ்கின்றார்கள். அப்படி இருக்க, நீ வருவதால் ஏற்படப் போகும் விளைவைச் சிந்திக்க மறுக்கின்றாய் என்றும், போத அமைந்தனை ஆதலால் எல்லை அற்ற இடர் (எனக்கு) தருவாய்' என்றும், இராமன் ஏன் கூறவேண்டும்? காட்டில் உள்ள முனிவர்களின் மனைவிமார்கள் அம்முனிவர்கட்கு இடரையா தருகின்றனர்? எனவே, இதனைக் கூறியவன் தசரதராமன் என்பதைக் காட்டிலும், முழுதுணர் மூல இராமன் என்று நினைப்பதே பொருத்தமாக உள்ளது. அவன் கூறியபடியே விளைவு பயங்கரமாக இருந்தது. அமைதியாகப் பதினான்கு ஆண்டுகளைக் கழித்து விட்டு அயோத்தி திரும்ப முடியாமல் எல்லையற்ற இடரையும் அவனுக்குத் தந்தாள் என்று நினைக்கும்பொழுது இது மூல இராமனின் பேச்சு என்று நினைப்பதில் தவறில்லை. அரங்கிலே சூர்ப்பனகை இராமனும் பிராட்டியும் கழுகின் வேந்தன் காவலில் அமைதியாக வாழ்ந்த கொண்டிருக்கும் பொழுது விதி குறிக்கிடுகின்றது. பாற்கடல் துயின்றோன் அங்கேயே அமைதியாக இராமல், பிராட்டியை ஓரிடத்தில் பிறக்குமாறு செய்து, தானும் ஒரிடத்தில் பிறந்து, பிறகு அவளை மணஞ்செய்து கொண்டு வனத்திடை வந்தது பஞ்சவடியில் ஆசிரம வாழ்க்கையின் இன்பத்தைக் காணவா? இதுவரை மூல இராமன் தொழிற்படாததால், சானகிராமன் ஒரளவு காட்டு வாழ்க்கையிலும் இன்பங்காணத் தொடங்கி விட்டான்.