பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 38 இராமன் - பன்முக நோக்கில் & காரணம் கூறவந்த கவிஞன், அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, நல்லருள் துறந்தனள் (1484) என்று கூறிய காரணத்தை இப்பொழுதும் திருப்பிக் கூற வேண்டும் அரக்கர் பாவமும், அல்லர் இயற்றிய அறமும் துரக்க இலக்குவன் சொல்லைச் செவிமடுக்க மறுத்தாள் என்று கூறுவதே பொருத்தமாகும். சீதை நிலைமை - மேல் விளக்கம் கணவன் ஆற்றலை உண்மையாகவே அறியாதவளாக இருந்திருந்தால் துறவு வேடம் பூண்டு வந்த இராவணனிடம் பின்வருமாறு பேசி இருப்பாளா? "மின்திரண்டனைய பங்கிவிராதனும், வெகுளி பொங்கக் கன்றிய மனத்து வென்றிக் கரன் முதல்கணக்கிலோரும், பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் - அன்று அவர்க்கு அடுத்தது உன்னி, மழைக்கண் நீர் அருவி சோர்வாள். - கம்ப 3374 "வாள் அரிவள்ளல்; சொன்ன மான் கணம் நிருதரானார்; கேளொடு மடியுமாறும், வானவர் கிளருமாறும், நாளையே காண்டிர் அன்றே, நவை இலிர், உணர்கிலிரோ? - கம்ப 3375 கவினும் வெஞ் சிலைக் கை வென்றிக் காகுத்தன்

கற்பினேனை, புவியிடை ஒழுக்கம் நோக்காய், பொங்குனரி, புனிதர் ஈயும் அவியை நாய் வேட்டதென்ன, என்சொனாய்? அரக்க!

. 'চাচটাগা" - கம்ப 3385