பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்கர்களும் இராமனும் 38 387 சென்றுவிட்ட கும்பன் இறுதியாக மூன்று பாடல்களில் தன் கருத்தை வெளியிடுகிறான்: "இந்திரன் பகைஞனும், இராமன் தம்பிகை மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்" - கம்ப 7367 "என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால், பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை - தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே." - கம்ப 7368 "வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி நின்றது, பிடர் பிடித்து உந்த நின்றது; YYYDLLL DYCCCYYYDYYYLLLL LLLLLLYLLLLLYYLLLLLCCCLLCYYLLLYYLLLLYY - கம்ப 7366 இப்பாடலகளில் இந்திரன் பகைஞனும என்று தொடங்கும் பாடலை ஆய்வது தேவையாகும். அப்பாடலில் இந்திரசித்தன் இலக்குவனுடைய மந்திர அம்பினால் மடிதல் உறுதி என்று கூறியது எவ்வளவு உண்மை! எந்தத் தெய்வப் படையாலும் இந்திரசித்தனைத் கொல்ல முடியாது என்பதை நிகும்பலையில் அறிந்த இலக்குவன், இராமன் பரம்பொருள் என்பது உண்மையானால் இந்தச் சாதாரண பிறைமுகவாளி அவனைக் கொல்வதாக (9166) என்று சொல்லியே இந்திரசித்தனைக் கொன்றான் என்று அறியும்போது, மந்திர அம்பு என்று கும்பன் கூறியது அவனது பேரறிவை விளக்குகின்றது.