பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 蕊 103 濠 நாமும் தலைவியின் நிலையை எய்துகின்றோம். இங் குத் தலைவி என்பது தலைவி நிலையை அடைந்த அடிகளே. 85. வியப்பு மொழி: அடிகள் நற்றாய் நிலையில் தன் மகள் இறைவனது திருவருள் வாய்க்கப் பெற்றதனை வியந்து பேசுவதாக அமைத்தது இப்பதிகம். இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பத்துப் பாடல்களைக கொண்டது. திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார் மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார் கருவில் தோன்றும் எங்கள்.உயிர் காக்க நினைத்த கருனையினார் குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே (2) அஞ்சொற் கிளியே மகளேநீ - அரிய தவமே தாற்றினையோ வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார் கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால் கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே (7) மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண்ணிறுடையார் வெள்விடையார் பயிலின் மொழியாள் பாங்குடையார் பனைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்