பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寧 堪12 緣 இராமலிங்க அடிகள் சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும் மாதே வருக்கும் மாதேவர் - மெளன யோகி என்றாலும் காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே (11) பாடல்கள் பன்னிரண்டும் அற்புதமானவை. ஆயினும் ஆறு பாடல்களே காட்டப் பெற்றன. பாடல்கள் யாவும் 'நான் அவர்மேல் காதல் ஒழியேன் கனவிலுமே என்ற தொடரால் இறுகின்றன. இதனால் இறைவன்மீது தாம் கொண்ட நெஞ்சுறுதியைக் காட்டுகின்றார் தலைவி நிலையில் உள்ள அடிகள். 94. ஆற்றா விரகம்: திருஒற்றியூர் இறைவன்மீது தலைவி தான் கொண்ட ஆற்றாவிரகத்தை"த் தோழி யொடு பத்துப் பாடல்களால் பகிர்ந்து கொள்வனவாக அமைந்தது இப்பதிகம். பாடல்கள் யாவும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. பாடியவாய் தேன் சுரக்கும் பான்மையனவாய்த் திகழ் கின்றன. ஒனம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால் மான வலியச் சென்றென்னை மருவி அனைவீர் என்றேநான் நானம் விடுத்து நவின்றாலும், நாமார் நீயார் என்பாரேல் என விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ (1) ஊர்என்றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅனை வீர்என்றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும்