பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந்திருமுறைப் பாடல்கள் 案 175 影 ஏற்றுவார் கொடிகொள் எந்தையே போற்றி இறைவதின் இருங்கழல் போற்றி சாற்றுமா றரிய பெருமையே போற்றி தலைவநின் தாட்டுனை போற்றி (7) நான்செயும் பிழைகள் பலவும்நீ பொறுத்து நலன்தரல் வேண்டுவன் போற்றி ஏன்செய்தாய் என்பார் இல்லை.மற் றெனக்குள் இன்னருள் நோக்கஞ்செய் போற்றி ஊன்செய்நா வால்உன் ஐந்தெழுத் தெளியேன் ஒதநீ உவந்தருள் போற்றி மான்செயும் நெடுங்கண் மலைமகள் இடங்கொள் வள்ளலே போற்றிநின் அருளே (10) பாடல்களை உளங்கரைந்து ஒதி அநுபவித்தால் மணிவாசகப் பெருமானின் 'போற்றித் திருஅகவலை’ ஒதினால் பெறும் அநுபவம் போன்று ஒர் இனிய அநுபவத்தை நுகரலாம். - 5. எதிர்கொள் பத்து: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பால் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். இதில் சில பாடல்களில் ஆழங் கால் படுவோம். ஆனந்தக் கூத்தனை அம்பலத் தானை அற்புதத் தேனைஎம் ஆதிப் பிரானைத் தேனந்தக் கொன்றைஅம் செஞ்சடை யானைச் செங்கண்வி டையனை எங்கண் மணியை மோனந்தத் தார்பெறும் தானந்தத் தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை ஈனந்தக் காதெனை என்றுகொண் டானை இன்றைஇ ரவில்.எ தீர்ந்துகொள் வேனே (1) மாலயன் தேடியும் கானா மலையை வந்தனை செய்பவர் கண்டம ருந்தை ஆலம்.அ முதின்அ ருந்தல்செய் தானை ஆதியை ஆதியோ டந்தமி லானைக்