பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 194 岑 இராமலிங்க அடிகள் உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே-இன்ப உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே (5) கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே-என் கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமா ரே (7) கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே-மூன்று கண்ணுடையார் என்பார்ஜயோ பாங்கிமா ரே (8) கண்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே-மனங். கரையாரென் னளவிலே பாங்கிமா ரே (9) கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே-இன்று கைநழுவ விடுவாரோ பாங்கிமா ரே (11) கரமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே-என்றன் காதலைக்கண் டறிவாரோ பாங்கிமா ரே (13) காவலையெல் லாம்கடந்து பாங்கிமா ரே-என்னைக் கைகலந்த கள்ளரவர் பாங்மா ரே (14) கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே-நான் கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமா ரே (16) கிள்ளையைத்து தாவிடுத்தேன் பாங்கிமா ரே-அது கேட்டுவரக் காணேன்ஜயோ பாங்கிமா ரே (18) குற்றமெல்லாம் குணமாகப் பாங்கிமாரே - கொள்ளுங் கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமா ரே (22) குஞ்சிதபொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே-உள்ள குறையெல்லாம் தீருங்கண்டீர் பாங்கிமா ரே (24) கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே-அது கூடும் வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமா ரே (27) அற்புதமானக் கண்ணிகள். தோழி ஒருத்தி நிலை யில் தம்மைப் பாவித்துக் கொண்டு மற்றைய தோழிமார்