பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 218 球 இராமலிங்க அடிகள் தால் 'ஆளுடைய (= ஆட்கொள்ளப்படுதல் உடைய) என்ற அடைமொழி அவர்கள்தம் இப்பெயர்களுடன் சேர்வதாயிற்று. இவ்வகையில் நம் வள்ளல் பெருமான் ஆளுடைய வள்ளலார் ஆகின்றார். வள்ளல் பெருமான் இந்நால்வர்மீது அருளியுள்ள மாலைகளை 'ஆளுடைய நால்வர் அருண்மாலை எனக் குறிக்கலாம். இந்த நான்கு மாலைகளைத் தவிர, பிற பாடல்களிலும் இந்த நால்வரையும் இவர்தம் அருளிச் செயல்களையும் அவர் தம் வாழ்க்கையில் நேர்ந்த அற்புதங்களையும் பாராட்டு வர் நம் அடிகள். * , 9. ஆளுடைய பிள்ளையார் அருண் மாலை: இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. ஆளு டைய பிள்ளையாரை அடிகள் தமது இளமையிலேயே வழிபடும் குருவாக (உபசனா குருவாக)க் கொண்டார் கள். இம்மாலையில் அதற்குரிய குறிப்புகள் அகச்சான் றுகளாக அமைகின்றன. உலகியல் உணர்வோர் அணுத்துணை யேனும் உற்றிலாச் சிறியஓர் பருவத் திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவும் தரமிலா மையினான் விலகுறுங் காலத்தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய் திகலநற் காழி ஞானசம் பந்தத் தெள்ளுமுத தாஞ்சிவ குருவே (1) பிள்ளையாருக்குப் பெருமான் உயிர் அநுபவம், அருள் அநுபவம், சிவ அநுபவம் இன்னதெனச் சுட்டி யருளினார். 1. இதற்கு ஒப்ப சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணி மாலை"யைக் குறிக்கலாம். இந்த இருவரே நால்வரை அநுபவித்தவர்கள்.