பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

等220。球 இராமலிங்க அடிகள் விள்ளொனா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅது பவம்என்று உள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே (5) என்பதால் அடிகளுக்கு சிவாநுபவம் அருளப் பெற் றதை அறியலாம். . ஞானநெறியில் முன்புறும் நிலை எது பின்புறும் நிலை எது என அடிகள் உளம் மயங்கியபோது ஆளு டைய பிள்ளையார் தாம் அருளிய திருநெறிய தமிழாகிய தேவாரத்தைக் கொண்டு அடிகளின் ஐயம் தீர்க்கப் பெறுகின்றது. முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னிநின் துளமயக் குறுங்கால் அன்புறு நினையால் திருநெறித் தமிழ்கொண் டையநீத் தருளிய அரசே என்பு:பெண் ணுருவோ டின்னுயி ரதுகொண் டெழுந்திடப் புரிந்துல கெல்லாம் இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே என்னுயிர்க் குயிர்எனும் குருவே (9) என்ற பாடலால் இதனைத் தெளியலாம். பலகற்ப காலம் முயன்றாலும் பெறுதற்கரிய திற னெல்லாம் ஒரு பகலில் சீகாழிப் பிள்ளையார் தமக்கு அளித்ததாக அடிகளின் குறிப்பு, வருபகற் கற்பம் பலமுயன்றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே ஒருபகற் பொழுதில் உறஅளித் தணைநின் உறுபெருங் கருனைஎன் உரைப்பேன் 2. தோடுடைய செவியன் (1.1.11) என்பதன் திருக்கடைக் காப்பில் திருநெ றிய தமிழ் பற்றிய குறிப்பைக் காணலாம்.