பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 244 岑 இராமலிங்க அடிகள் இறக்கவும் ஆசை இல்லை.இப் படிநான் இருக்கவும் ஆசைஇன் றினிநான் பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் செய்யவும் ஆசைஒன்றில்லை துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து துங்கவும் ஆசைஒன் றிலையே (15) எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செய்யும் அவ்வுயிர் களுக்கு வரும்.இடை ஆற்றை அகற்றியே அச்சநீக் கிடவும் செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைக்ாண் எந்தாய் (18) திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும்பெருங் கோயில் உருவளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவா றியல்பெறப் புதுக்கி மருவளர் மலரின் விளக்கிநின் மேனி வண்ணங்கண் டுளங்களித் திடவும் கருவளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சைகாண் எந்தாய் (20) தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்" துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் 4. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை