பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 316 露 இராமலிங்க அடிகள் நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர் நல்லஒரு தருணம்.இது வல்லைவம்மின் நீரே (6) விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே வருகின்ற தருணம்.இது வரம்பெறலாம் நீவிர் கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக் கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே (8) ஆசை.உண்டேல் வம்மின்இங்கே அருட்சோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவாறளித்தான் எல்லாஞ்செய் வல்லசித்தன் என்உயிரில் கலந்தான் தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத் திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள் இங் கிதுவே