பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

激 334 家 - இராமலிங்க அடிகள் அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கனையும் விடுத்தான் அருள்அடையும் ஆசையினால் ஆருயுர்தான் பொறுத்தாள் இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும் எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல் இவள்மதமும் இவள்.குலமும் எல்லாமும் சிவமே - சம்மதமோ தேவதிரு வாய்மலர வேண்டும் சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே (1) தத்துவருந் தத்துவம்செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார் எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள், இருவிழிகள் நீர்ச்ெசரிவாள். என்னுயிர்நாயகனே. ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என்றுமையே ஒதுகின்றாள் இவள் அளவில் உத்தமரே உமது சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும் சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே (5)