பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。畿 338 球 இராமலிங்க அடிகள் ஞான மருந்தில் மருந்து - சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து என்று பல்லவியாகத் தொடங்கி 33 கண்ணிகளில் முடிகின்றன. அவற்றுள் சில கண்ணிகள்: எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள் என்றும் விடாமல் இனிக்கு மருந்து சொல்லால் அளவா மருந்து - சுயஞ் சோதி அருட்பெருஞ் சோதி மருந்து ஞான (2) அன்பர்க் கெளிய மருந்து - மற்றை . ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை இன்ப நிலையில் இருத்து மருந்து ஞான (5) . என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட் சோதியால் என்னைத் துலக்கு மருந்து ஞான (19) உன்னற் கரிதா மருந்து - எனக் குள்ளும் புறத்தும் உலாவு மருந்து தன்னந் தனித்த மருந்து - சுத்தச் - சாக்கிரா தீதச் சபேச மருந்து ஞான (28) ஆரணத் தோங்கு மருந்து - அருள் ஆகம மாகி,அண் ணிக்கு மருந்து காணம் காட்டு மருந்து - எல்லாம் -- கண்ட மருந்தென்னுள் கொண்ட மருந்து ஞாண் (32) என்பவை காண்க. - 108. அருள் அற்புதம்: இதுவும் சிந்துப் பாடல் களில் அமைந்தது. - அற்புதம் அற்புத மே - அருள் அற்புதம் அற்புத மே