பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் திருமுறையின் பாடல்கள் 拳 59 笨 14. ஆறெழுத்துண்மை: ஆறெழுத்து என்பது ஆறு முகப் பெருமானைக் கூறும் மந்திரம். சரவணபவ” னெபது போன்றது. பத்துப் பாடல்களைக் கொண்ட இப்பதிகம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தயாப் பில் அமைந்தது. அனைத்துப் பாடல்களும் தணிகைக் குமரனை நோக்கி விளிப்பவை. இவற்றில் மூன்று பாடல் リ エ丁2 எய்தற் கரிய அருட்சுடரே எல்லாம் வல்ல இறையோனே செய்தற் கரிய வளத்தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை உய்தற் பொருட்டிங் குச்சரித்தே உயர்ந்த திருவெண் ணிறிட்டால் வைதற் கில்லாப் புகழ்ச்சிவரும் வன்கண் ஒன்றும் வாராதே. (2) சார்ந்த அடியார்க் கருள்அளிக்கும் தருமக் கடலே தற்பரமே வார்ந்த பொழில்சூழ் திருத்தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை ஒர்ந்து மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணிறிட்டால் ஆர்ந்த ஞானம் உறும்அழியா - அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே. (7) பதியே எங்கும் நிறைந்தருளும் பரம சுகமே பரஞ்சுடரே கதியே அளிக்கும் தணிகைஅமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை உதியேர் மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணிறிட்டால் துதினர் நினது பதந்தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே. (9)