காட்சிப் படலம்
115
69, குழலோ யாழோ செந்தேனைக்
குடிக்குஞ் சுரும்பி னின் னிசையோ
எழிலார் குன்றக் குறக்கொடியி
னிசைச்செந் தேனோ வெனவுள்ளம்
உழலா நின்றே கண்களிக்க
வுள்ள முவக்கச் செவிகுளிரக்
கழலோ னேரப் பாட்டுடையார்க்
காணச் சென்றா னத்திசையே.
70. செல்லச் செல்ல வின்னிசையுஞ்
சிறுகிச் சிறகிச் செவிகேட்ப
தில்லைப் போலு முளபோலு
மிதுவென் கனவோ நனவேயோ
சொல்லச் சொல்லத் தமிழிசையைச்
சுவைத்துச் சுவைத்துச் செஞ்செவியும்
புல்லிக் கொள்ள விடாரின்றிப்
4|jறம்விட் ட.னவோ வெனவயர்த்தான்.
71. ஆடூஉ வொருவன் றனை நோக்கி
யணித்தா வருத லதுநோக்கி
தோடார் குழலு மெழுந்திருந்து
துகிலை நீவி யணிதிருத்தி
ஓ டார் பொதிப்பூந் தொடைதிருத்தி
யிருள்சூழ் கொண்ட குழறிருத்திப்
பா(டோர் புதர்ப்பூக் கொய்வாள்போற்
டைம்பொற் பாவை யென (நின் றாள்.
72, ஐயப் பட்டேட யின்னிசைவந்
தடைந்த திசையே யவன்சென்று
பொய்யற் பட்ட விடையாரப்
பொலிவிற் பட்ட பொன் பட்டால்
செய்யப்பட்ட வுடையுடுத்து
நிழலிற் பட்ட நிழல்போற்றுக்
கொய்யப் பட்டுத் தனி நிற்கும்
கொம்பின் பக்கங் குறுகினனால்,
10. அயர்த் தான்-ஐயப்பட்டான்.
71. ஆடுஉ'ஆண். தேசடு-பூ. ஏடு-இதழ். ஓர்பாடு-
ஒருபக்கம்.
72. நிழலில் பட்ட நிழல்- நிழவின் நிழல்.
பக்கம்:இராவண காவியம்.pdf/141
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
