988
இளசுகம்
2. தமிழர்பே ரவையை வீட்டுச் சலிப்புட னெழுந்து சென்ற
'உமிழகத் துயிர்கொல் நஞ்சை யுடையபாம் பனைய பாவி
தமிழருக் கியல்பா யுள்ள தன்மதிப் பதனை நீத்துத்
தமிழருக் கழிவு காணத் தன்னலத் துறைபுக் கானே.
3. கரவிடை மருவி வாழுங் கள்வரின் களவுக் கேற்ப
இரவிடை யுதவி செய்யு மிருளினு மிருண்ட நெஞ்சன்
அரவிடை யமரு நஞ்சு மஞ்சிடச் செய்யும் வஞ்சன்
புரவிடை யழிவு செய்யும் புன்மையில் நலைப்பட்
டானே.
4. வாலியின் தம்பி போல வாழவைத் திடுவே னென்று
போலிமுன் சொன்ன சொல்லின் பொருளினை யுண்மை
யாக்கும்
வேலையின் முனைந்து பாயும் வேங்கையை யடைய
வெண்ணும்
காலியின் கன்று போலக் கயமையின் தலைநின் றானே.
5. தன்னுடன் வருவ தாகத் தானே மொப்புக் கொண்ட
நன்னெறி கடந்த நீலன் முதலிய நால்வ ரோடு
புன் னெறி யுடையா னோடிப் போய்ப்பகைப் புலத்தி
ராமன்
தன்னடி. யுறையாய் வாழத் தான் புறப் பட்டா னம்மா.
6. கோவிலை யகன்று மாடக் கொடித்தெரு வதனைத்
தாண்டி
பாவல ருள்ளம் போன்ற பழம்பெரும் பதியை நீங்கிக்
காவினை யழித்துப் பூவின் கடிமணங் கொள்வான்
போன்ற
பாவியும் பகைவர் தங்கும் பாடியைக் குறுகி னானே.
7. தன்னினத் தமிழர் சாவைத் தன துவாழ் வாக
வெண்ணித்
துன்னலர் துணையை நாடித் துறந்துகாண் மானத்தோடு
நன்னெறி யிதுதா னென்று 15டந்தவத் தீயோர் தம்மை
இன் னலர் பாடி காத்தாங் கிருந்தகா வலர்கண் டாரே.
3. புரவு-காப்பு. இங்கே - தமிழர்,
4. காலி-மாடு.
6, அடியுறை-அடிமை,
பக்கம்:இராவண காவியம்.pdf/414
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
